அதிகரிக்கும் காட்டுத்தீப் பரவல் ; அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காட்டுத்தீப்பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியன பொலிஸாருடன் இணைந்து, காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.