இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையின் இராட்சத இரத்தினக்கல் விற்பனைக்கு உதவும் பிரித்தானியர்

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான ஜேம்ஸ் கொன்ஸ்டானிடோ தான் உதவுவதாக அறிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் நகை அடகு நிலையங்களை நடாத்தி வருகின்றார்.
இந்நிலையில் நவீன் அமித கமகே என்பவருக்கு இந்தக் கல் சொந்தமானது என்பதுடன், இதனை விற்பனை செய்து கொடுக்கும் பொறுப்பினை கொன்ஸ்டான்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இரத்தினபுரி பகுதியில் இந்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவின் அரசி என அழைக்கப்படும் இந்த இரத்தினக் கல் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய மிகவும் அரிய வகை கல் ஆகும்.
குறித்த அரிய வகை இரத்தினக்கல் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.