பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
தமிழர் பகுதியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயது இளைஞன்!

வவுனியா பகுதியில் 20 வயது இளைஞன் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் (28-05-2024) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.