பட்டலந்த விவகாரம் போன்று யாழ் நூலகம் தொடர்பிலும் விசாரணை வேண்டும்
திருகோணமலையில் நீண்ட காலமாக மோசமான செயலில் ஈடுபட்டு வந்த பெண் அதிரடி கைது!

திருகோணமலையில் சம்பூர், சேனையூர் 6ஆம் வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை (18-07-2024) சம்பூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 6 பியர் ரின்களும், 2 சாராய போத்தல்களும் ஒரு கசிப்பு போத்தலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், அந்த பெண் சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 42 வயதானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்து அப்பிரதேசத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தொடர்ச்சியான தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அனுமதி இல்லாத மதுபான விற்பனையில் ஈடுபட்டமை போன்ற இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும், பெண்ணையும் இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.