வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா? வாஸ்துபடி இதை மட்டும் செய்தாலே போதும்
வாஸ்து படி வீட்டில் பண வரவை அதிகரித்து மகிழ்ச்சியை கொண்டுவர நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்போம்.
இரவு நேரங்களில் கராம்பு மற்றும் கற்பூரத்தை வைத்து கொளுத்தும் போது உங்கள் எண்ணங்கள் சரியாக இருந்தால் நீங்கள் அதை கொளுத்தும் போது நினைத்த விஷயம் கண்டிப்பாக நிறைவேறும்.
இதை எரிக்கும் போது வெள்ளிக்கிண்ணத்தில் எரிக்கவும் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது.
இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும் இந்த பொருட்களை பூஜை அறையில் எரித்துவிட்டு அதன் பின்னர் இதன் புகையை வீட்டில் எல்லா இடத்திலும் பரப்ப வேண்டும்.
இதனால் வீட்டில் எதிரான தாக்கங்கள் குறைக்கப்பட்டு பணப்பற்றாக்குறை குறையும்.
சனிக்கிழமை மாலை வீட்டில் கராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது.
நாம் ஒரு விஷயம் ஆரம்பிக்கும் போது அதை சில தீய சக்திகள் வெற்றி பெற விடாமல் அதற்கு தடையாக இருக்கும்.
இதன்போது இந்த பொருட்களை வைத்து எரித்தால் இந்த தடைகள் விட்டு போகும்