போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
400 கிலோ கோதுமை மா திருட்டு!
வத்தளை – மாபோலயில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் 400 கிலோகிராம் கோதுமை மாவை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வத்தளையை சேர்ந்த 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 1,12,000 ரூபா பெறுமதியான 50 கிலோகிராம் கோதுமை மா அடங்கிய 08 பொதிகளை திருடியுள்ளார்.
அத்துடன் அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.