சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன், பாதுகாப்பற்ற நீர்க்குழியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றது.
சிறுவன் சுமார் மூன்று மணி நேரம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.பிறகு, வீட்டுக்கு அருகே உள்ள வெற்றிகாணியில், பாதுகாப்பின்றி இருந்த நீர்க்குழியில் சடலமாக மீட்கப்பட்டார்.சமூகத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடியபோது இந்த மீட்பு ஏற்பட்டது.
சிசிரிவி காணொளி ஒன்றில், இனம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.எனினும், அந்த நபர் யார் என்பது தெளிவாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தவறுதலாக நீர்க்குழியில் விழுந்ததா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.