நாடு திரும்பியவுடன் தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி அனுரகுமார

நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுது நேரத்திலேயே தனது குடியுரிமையை நிறைவேற்றியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் வியட்நாம் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (06) பிற்பகல் இலங்கை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.