ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரிய பாப்பரசர்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை கைது செய்ய வேண்டும் என மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ், இலங்கை அரசுக்கு கோரியிருந்ததாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர், பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இலங்கை மக்களுக்காக மிகுந்த கரிசனையுடனும், அன்புடனும் செயல்பட்டவர் எனக் குறிப்பிட்டு, தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட 41 பேரை நேரில் வத்திக்கானில் சந்தித்து ஆசீர்வாதம் அளித்தார் என நினைவூட்டினார்.
அத்துடன், ஈஸ்டர் பண்டிகை செய்தியில் இலங்கை குறித்து முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது, இச்சம்பவத்திற்கு எதிரான பாப்பாவின் துனிவும் ஆதரவும் வெளிப்பட்டது எனவும் அவர் கூறினார்.
கர்தினால் மெல்கம், நியாயம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோர் சார்பில் உண்மை வெளிச்சம் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வலியுறுத்தினார்.