உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ் பெண்ணை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

கடந்த 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு, 10 வருடங்கள் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
பெண்ணை கொலை செய்த பின்னர் அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பேட்ரிக் கிருஷ்ணராஜா என்பவர் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணையின் பின், நீதிபதி ஆதித்ய படபெந்திகே குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மரண தண்டனை விதித்துள்ளார்.
மரண தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர், குற்றவாளி நிரபராதி எனக் கூறினாலும், நீதிமன்றம் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளது.