இலங்கையில் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

இலங்கை முழுவதும் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக, நாடளாவிய ரீதியில் அன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இச்சட்ட நடவடிக்கையில் இருந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகள் மட்டும் விலக்கமாக உள்ளன.
இந்த அறிவிப்பானது தேர்தல் நாளில் சமாதானமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.