துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் லேலிஹெத்துவ சந்தி அருகிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், மேலதிக விசாரணைகளில், ஏப்ரல் 17ஆம் திகதி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை முயற்சி செய்த சம்பவத்தில் இந்த சந்தேக நபர் துப்பாக்கிதாரியாக பங்கேற்றதாக தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸார் இந்நிகழ்வு தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.