தேர்தல் நாளிலும் வன்முறை; கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதி நபர் காயமடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக விஜய குமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.