உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ; மேலும் இருவர் கைது

யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் நேற்று (28.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் சிறுமி முறைப்பாடு பதிவு செய்ததைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்திற்கு வந்தது. தொடர் விசாரணையில், முதற்கட்டமாக மூவர் (இரு பெண்கள் உட்பட) கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, 45 மற்றும் 52 வயதுடைய இரு ஆண்கள் நேற்றைய தினம் (28.04.2025) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.