வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்றவர்களுக்கு நடந்த கதி!

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளைக் காப்பதற்கான சட்டங்களை மீறி ஆமைகளை பிடிக்க முயன்ற நால்வர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குகுல்கடுவ பகுதியில் இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடத்திய சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா ஈச்சங்குளம், மொனராகலை ரணவராவ மற்றும் அநுராதபுரம் ஓயாமடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.