விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுபோக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கத் தொடங்கும் இந்நேரத்தில், விவசாயிகள் எலிக்காய்ச்சலிலிருந்து (Leptospirosis) தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள அத்தியாவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களிடம் இலவசமாக இந்த தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்றும், இதனை தவிர்க்காமல் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் இன்பாஸ் பாரூக் கூறுகையில் “விவசாயிகள் சிகிச்சைகளை பெறாமல் நன்கு ஈரமான நிலங்களில் வேலை செய்யும் போது, எலிக்காய்ச்சல் தாக்கும் அபாயம் அதிகம். இது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.”
உங்கள் கிராம சுகாதார வைத்திய நிலையம், பொது சுகாதார பரிசோதகரிடம்,மாவட்ட வைத்தியசாலைகள் பெற்றுக்கொள்ளலாம்
எலிக்காய்ச்சல் அறிகுறிகள் உயர்ந்த காய்ச்சல்,தசை வலி, கண்களில் சிவப்பு, வாந்தி, பசியின்மை ,சிறுநீரில் குறைவு
சிக்கல் ஏற்படும் முன் தடுப்பே சிறந்தது என்பது போல, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க, சுகாதார அமைச்சு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது.