A/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம் ; பிரதமர் வெளியிட்ட தகவல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, 2026ஆம் ஆண்டில் புதிய கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான நெறிப்படுத்திய வழிகாட்டல். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுத விரும்பும் மாணவர்களுக்கு உதவி. இப்போதுவரை அடுத்த கட்டம் குறித்த தெளிவான திட்டமில்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கல்.
மேலும், கடந்த 75 ஆண்டுகளாக நிலவி வந்த ஊழல் மற்றும் அரசியல் பாதுகாப்பு கலந்த ஆட்சியை நீக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சூழலில், அரச மற்றும் பாதுகாப்பு சேவைகளில் இருந்த சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.