உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக மீனவர்களது படகுகளை மூழ்கடிக்க சதி

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறப்படும் 184 தமிழக மீனவர்களின் படகுகள் தற்போது இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அரச உடமையாக்கப்பட்ட 74 படகுகளில் 34 படகுகளை மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதற்கான எழுத்து மூல பரிந்துரை கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, நீருக்கடியில் செயற்கை அடி மூலக்கூறுகளை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநரின் கடிதம் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, மாவட்டக் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களிடம், இந்த படகுகளை நடுக்கடலில் மூழ்கடிப்பதற்கான சிபாரிசுகள் எழுத்து மூலமாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட படகுகள்,தற்போது அரசுடமையாக்கப்பட்ட 74 படகுகளில் 34 இடைமறிக்கப்பட்டுள்ளன. 13 படகுகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இச்செய்தி தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தையும் இருநாட்டு உறவுகளில் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியது எனக் கருதப்படுகிறது.