யாழில் இன்று பணி புறக்கணிப்பில் சுகாதார தரப்பினர் ; பெரும் அவதிக்குள்ளாக போகும் மக்கள்

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரத் தரப்பினரால் இன்று (26.04.2025) பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக யாழ்ப்பாண மாநகர சபை வைத்திய அதிகாரிகள் சங்கம், யாழ்ப்பாண மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் இணைந்து பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக மாநகர சபையின் பொதுச் சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் இவை இன்று முதல் பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், பணி புறக்கணிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் அனைத்து சிரமங்களுக்கும் மாநகர சபை ஆணையாளரும் கணக்காளரும் நேரடி பொறுப்பாளிகள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரின் அசாதாரண செயற்பாடுகளால் சுகாதார சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவே இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுக்க நேரிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இன்று யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால், மக்கள் அச்சமடைந்து நிற்கிறார்கள்.