யாழ். இளைஞர்களை அச்சுறுத்திய மாங்குளம் பொலிஸாருகு சிக்கல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் குழுவினர் வவுனியா நோக்கி பயணித்த போது மாங்குளம் பொலிஸார் வழிமறித்து, டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களுடன் பொலிஸார் வாக்குவாதத்திலும் அச்சுறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரினை இளைஞர்கள் ஊடகங்கள் வழியாக வெளியிட்டதை தொடர்ந்து, சம்பவம் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட இரு பொலிஸாருக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், விசாரணைகள் தொடருகின்றன.