வாகனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்பட்டதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. எனினும், வாகனங்களின் விலை மிகக் கணிசமாக உயர்ந்திருப்பது இந்த எதிர்பார்ப்பை முற்றாகத் தகர்த்துவிட்டதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களை வாங்குவதில் மனமுடைந்துள்ளனர், இதனால் வாகன சந்தையில் நிலவும் மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மூன்று மாத காலத்தில் பதிவு செய்யப்படாவிட்டால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற வர்த்தக விதிமுறைகளும் இறக்குமதியாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு பிரதான வாகன வர்த்தகர் கூறுகையில் “தடை நீக்கப்பட்ட உடனேயே அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் விலை உயர்வு காரணமாக நிலைமையே மாறிவிட்டது. விற்பனை குறைந்திருப்பதால் நாங்கள் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்குகிறோம்.”