நுவரெலியாவில் வெசாக் பண்டிகையை கொண்டாட அரசு அங்கீகாரம்

2025ஆம் ஆண்டு (ஸ்ரீ பௌத்த வருடம் 2569) அரச வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடைபெற அரசாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குமார்கள் மற்றும் ஒட்டுமொத்த புத்தசாசனப் பேரவையின் ஆலோசனையின் அடிப்படையில், இந்த வெசாக் பண்டிகையை நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடத்துவது தொடர்பான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களம் இணைந்து செயற்படவுள்ளன.
“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” (‘ஹஜெத மித்தே கல்யாண – ஹஜெத புரிசுத்தமே’) என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை வெசாக் மகோற்சவம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் வாரத்தின் போதே நாட்டளவில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றும் அமைச்சரவை அறிவித்துள்ளது.