உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் ; தவிக்கும் குடும்பத்தினர்

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது அஸ்தியை காவிரி ஆற்றில் கரைக்க 35 உறவினர்கள் சென்றுள்ளனர்.
சடங்குக்குப் பின்பு அனைவரும் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான விஜய் (வயது 24) கிழக்குக் கரையில் இருந்து மேற்கு கரை நோக்கி நீந்த முயன்றுள்ளார். இதில் அவர் நடுவண் ஆற்றில் மூச்சுத் திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
உடனடியாக தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பின் அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.