போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி மங்களநாதன் இலட்சுமிஅம்மாள் (பூமலர்)
யாழ். வல்வெட்டித்துறை தெளியம்பை தேக்குமாவடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வல்லிபுரப்பரியாரியர் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மங்களநாதன் இலட்சுமிஅம்மாள் அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இயற்கையின் மடியில் இளைப்பாறினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,மங்களநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவகுரு, மகாலட்சுமி, பவளம், தங்கவடிவேலு மற்றும் தங்கராணி, கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பால்ராஜ், மோகன், ரஜி, தாசன் மற்றும் விஜிதா, வினோதா, நிறஞ்சிதா, ரூபி, கெளரி, ஈசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குமாரதேவன், மயூரதாஸ், மணியரசன், சகிப்பிரபா, அஜா, அம்மனா, ஈசா, ராஜிதா, அஸ்வினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிசேக், அசோக், டினேஸ், அக்ஷயன், ராஜூ, றமணன், நிரூஜன், விதுசன், ஜதுசன், மயூரன், தனஞ்ஜன், அனுஸ், மாறன், மயூநிசா, செரின், சனா, அன்சுகா, சரோமி, சபீனா, சயீரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,இந்தியா, சிவாஸ், சயாஸ், சனாஜா, லக்ஷன், தர்சினி, கர்னிகா, ராகவன், தாட்சாயினி, வினுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.