போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாலதேவி இரத்தினமயில் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமுப்பிள்ளை இரத்தினமயில் அவர்களின் அன்பு மனைவியும்,
கங்கை, லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரநிருபசிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஜா, அநோஜா, அட்சயா, சமிக்ஷா, அஷ்வின், அனுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், வாமதேவன் மற்றும் பகீதசீலன், தர்மசீலன், காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவதாசன், சந்திராதேவி, புஷ்பா, யோகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.