போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!
கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று நண்பகல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், காதலனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை! | A Student At The University Of Colombo Murder
கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மாணவி என அடையாளம் காணப்பட்டார்.
அதோடு கொலை செய்தாகக் கூறப்படும் சந்தேகநபரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலதிக நடவடிக்கைகள்
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இடம்பெற்ற பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை! | A Student At The University Of Colombo Murder
இதன்போது காதலன் என கூறப்படும் நபர், மூன்று மணிநேரத்துக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் 24 வயதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.