போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குடும்பத்தை முன்னேற்ற கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்ட கிரிதரன்; பலரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்
கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த 303 இலங்கையர்கள் , படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.
உயிரிழந்த கிரிதரன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இதனையடுத்து நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம்,நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து , இன்றைய தினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரகைகள் இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குடும்ப வறுமையை போக்கவென புறப்பட்ட கிரிதரனை இழந்த குடும்பம் இன்று நிர்க்கதிக்கு தள்லப்பட்டுள்ளமை பெரும் துரரத்தை ஏற்படுத்தியுள்ளது.