போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் 8 மாவட்டங்களில் கொடிய நோய் பரவும் அபாயம்! மக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் 8 மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நோய் கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தொடர்ந்து பரவி வருகின்றது.
கடந்த ஆண்டில் (2022) மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக யானைக்கால் நோயைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இருந்து இந்த நோயை 2030ஆம் ஆண்டு அளவில் ஒழிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, இரத்தப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வீடுகளுக்கு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அனைத்து சுகாதார அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளுடன் வீடுகளுக்கு வருகை தருவார்கள் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.