போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முயற்சிக்கும் கட்சி!
மொட்டு அதன் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும், ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (30-04-2023) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குகள் பெறுமதியற்றவை ஆகும். தத்தமது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மாத்திரமே அவர்களது கைகள் உயர்த்தப்பட்டன.
மக்களுக்காக அவர்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் ஆணை பெற்ற எவரும் அங்கத்துவம் பெறாத தற்போதைய நாடாளுமன்றம் செல்லுபடியற்றதாகவே காணப்படுகிறது.
இவ்வாறான நாடாளுமன்றமே நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை சட்டமாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவேதான், இந்த நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், மறுபுறம் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய தலைவர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சித்து வருகிறது.
ராஜபக்ஷர்களை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ரணிலே மீண்டும் நாட்டின் தலைவரானால் அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.