போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் வருவதற்கு புதுவியூகம்!
யாழ். மாநகர சபையின் முதல்வராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட் அவர்களின் இரு வரவு செலவுத் திடம் சபையில் தோற்கடிக்கப் பட்டதால் முதல்வர் பதவியை இழந்து 2020ம் ஆண்டு இரண்டாவது முறை மாநகர முதல்வருக்கான தேர்தல் இடம் பெற்றது.
அம் மாநகர சபை தேர்தலில் ஆர்னோல்டிற்கு எதிர் வேட்பாளராக மணிவண்ணன் வேட்பாளராக களமிறங்கியதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்டின் நெருங்கிய நண்பனான, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர சபை உறுப்பினர் ஒருவரை சபைக்கு செல்ல விடாமல் தடுத்து ஆர்னோல்ட் அவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.
2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைப்புரிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்ததால் அதனை எதிர்த்து தேர்தலில் ஆர்னோல்ட் களம் இறங்கியிருந்தார், அன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்னோல்ட் தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் மாநகர முதல்வராக முற்பட்ட காலப் பகுதியில் தோற்கடிக்கப் பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திடம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரும் தனது முதல்வர் பதவியினை இராஜினாமா செய்ததையடுத்து மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.
ஆர்னோல்ட் அவர்கள் இம் மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் உதவிகோரியுள்ளதுடன், இது தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளதாக யாழ். மாநகர சபையின் கூட்டமைப்பின் உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஈ.பி.டி.பியின் துணையுடன் புதிய மாநகர முதல்வராக ஆர்னோல்ட் அவர்களை தெரிவு செய்வதற்கு திரை மறைவில் பல பேச்சுக்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.