போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் மீண்டும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்!
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகிய பகுதிகளில் இரண்டு கடலாமைகள் இன்றையதினம் (21-09-2022) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
உடப்பு பிரதேசத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கடலாமை எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த கடலாமை சுமார் 3 1/2 அடி நீளமுடையது எனவும் இது சுமார் 40 கிலோ கிராம் எடையுடையது எனவும் உடப்பு மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, உடப்பு ஆண்டிமுனை பகுதியிலும் கடலாமை ஒன்று இன்றையதினம் இறந்த நிலையில் கரையொதுங்கியள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.
சுமார் 3 அடி நீளமுடையதுடன் 50 கிலோ கிராம் நிறை கொண்ட குறித்த கடலாமையின் மேல் பகுதி சேதமடைந்து காணப்பட்டதாகவும் மீனவர்கள் கூறினர்.
இவ்வாறு உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகிய பகுதிகளில் கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை பற்றி மீனவர்கள் ஆனைவிழுந்தான் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.