மீண்டும் சிக்கலில் தபால் மூல வாக்களிப்பு!

தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெற காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுவரை அரச அச்சக திணைக்களத்திலிருந்து தபால் வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவில்லையென தகவல் வெளியாகியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்கிழமை (21-03-2023) தேர்தல் ஆணைக்குழு தபால் வாக்குச்சீட்டுகளை தொடர்புடைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்கும் பொருட்டு, தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.