யாழில் சுற்றித்திரியும் மோசடிக்குழு!

இலங்கை நாணயத்துக்கு, டொலரை மாற்றித் தருவதாகக்கூறி, நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று, யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதான் 33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட நான்கு சந்தேநபர்களும், திருகோணமலை, தலவாக்கலை மற்றும் அநுராதபுரம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கை
மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை, குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாகக்கூறி, அதற்கான பணத்தை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவருமாறு அறிவித்து, பின்னர் குறித்த நபர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரிடம், 25 இலட்சம் மற்றும் 18 இலட்சம் ரூபா பணம் அவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. அத்துடன், காலியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும் குறித்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களின் உடமையிலிருது 825 அமெரிக்க டொலரும், 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.