உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதன்படி, 2024 மே 28 முதல் 30 ஆம் திகதி வரை, இணையவழியில் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பின்வரும் மூன்று முறைகளில் விண்ணப்பிக்கலாம்: பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்: www.doenets.lk இல் Our Services → Exam Information Centre என்பதைத் தேர்வு செய்யலாம். மொபைல் செயலி (DOE App) மூலமாக: “Exam Information Centre” பகுதியின் கீழ் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் இணையதளம்: onlineexams.gov.lk/eic இல் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பிக்கும்போது தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படினால், கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவிகளைப் பெறலாம்: இணைய வழி கிளை: 011-3661122 / 011-3671568 பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 011-2785231 / 011-2785681
மாணவர்கள் அனைவரும் இந்த விரிவாக்க வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை நேரத்தில் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.