போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் மரண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்.அராலி பகுதியில் வீடொன்றை உடைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
வீட்டில் இருந்தவர்கள் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து பதற்றமடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டதுடன் , வீட்டில் வைத்திருந்த 06 பவுண் நகை திருட்டு போய்யுள்ளமையை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.