போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ் பல்கலை முன்னாள் மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு! பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றைய தினம் (24-10-2022) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவபீட பிரிவில் கல்வி கற்ற குறித்த மாணவன் அதே பிரிவில் கல்வி கற்ற மாணவியை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார்.
தற்போது ஒரு பிள்ளையின் தந்தையான நிலையில் நேற்றைய தினம் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலை முன்னாள் மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு! பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் | Former Student Jaffna University Die Heart Attack
சம்பவத்தில் பரராஜசிங்கம் மோகீசன் வயது 30 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.