போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விபத்தில் உயிரிழந்த மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள்
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் விபத்தொன்றில் நேற்று வியாழக்கிழமை (நவ 24) காலை காலமானார்.
1962 பெப்ரவரி 05ஆம் திகதி பிறந்த இவர் அமரர் சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்களின் இரண்டாவது மகனாவார். சாதாரண கிரியைகள் முதல் மஹா கும்பாபிஷேகம் போன்ற பெரும் மஹோற்சவங்களை முன்னின்று நடத்தி, பல வருடகாலமாக சிவானந்த குருக்கள் இறைபணியாற்றி வந்தவர் ஆவார்.
. மேலும் இவர் இனம், மதம், மொழிகளை கடந்து அனைவரிடமும் மனிதநேய குணத்தோடு இயல்பாக பழகக்கூடியவர். இந்நிலையில் இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை கூறிவருகின்றனர்.