போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மந்தபாேசனம் காரணமாக மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தோட்டப்புர பாடசாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ராஜாங்க அமைச்சருக்கு பொறுப்பு வழங்கி இருகின்றோம். அத்துடன் மாணவர்களின் போசணை இந்த வருட இறுதிக்குள் 50 வீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களின் மந்த போசனம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாண ஆளுநர்களுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
குறிப்பாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வாறான அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர்.
மந்தபாேசனம் காரணமாக மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
அந்த நிலைமையை நிவர்த்திப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு கல்வி இராஜாங்க அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசேட வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் நாட்டில் 41 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம், அது பாேதுமானதாக இல்லை.
அதனால் இதனை 21 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்காக உலக உணவு திட்டம், யுனிசெப் அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.