போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த பொலிஸ் சார்ஜன்டுக்கு கிடைத்த மகிழ்ச்சி!
கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சார்ஜன்ட் புத்திக குமாரவுக்கு 25 இலட்சம் ரூபா பணப் பரிசும் சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்காக வர்த்தகர் ஒருவர் கொண்டு சென்ற சுமார் 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்ட இருவரையே குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மடக்கி பிடித்திருந்தார்.
சப்இன்ஸ்பெக்டர் பதவி
இது தொடர்பில் அநுராதபுரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
எம்மால் செய்யப்பட்டுள்ள பரிந்துரையை பொலிஸ் மா அதிபர் அங்கீகரித்த பின்னர் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அவர் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு உயர்த்தப்படுவார் என்றும் அத்துடன் அவருக்குப் பணப் பரிசும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை
கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் புத்திககுமார எப்பாவல பிரதேசத்தில் வசிப்பவர்.
இதேவேளை, வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், அவரது சேவையைப் பாராட்டி அலுவலகத்துக்கு அழைத்து தனது மகிழச்சியை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட மொட்டுகட்சி உறுப்பினர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.