போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி கந்தசாமி கனகம்மா
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 2ம் யூனிற்றை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கனகம்மா அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,இராசகிளி, வள்ளியம்மா, காலஞ்சென்ற அன்னப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,கனகேந்திரன்(முரசுமோட்டை), சிறிபாஸ்கரன்(பிரித்தானியா), பத்மசோதி(ஜேர்மனி), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காந்தறூபி, கிரிஜா, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சரணீதரன், சரன்ஜா, பானுஜா, நித்தியானந்தன், டினோஜா, விந்துஷன், கார்த்திபன், பிரியங்கா, நிவேதா, விதுஷா, பிரவீன், நிரோஜன், இனிஜா ஆகியோரின் பாட்டியும்,கயிலன், இஷானா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.