போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின் கட்டணம் காரணமாக தேயிலைத் தொழிற்சாலைகள் மூடும் நிலை
அண்மையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யப்பட்டமையினால் மின்கட்டணம் இரு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பராமரிப்பதில் கடும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு நாடு முழுவதும் பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 50,000 கொழுந்துகளை பயன்படுத்தும் தொழிற்சாலை ஒன்றின் சராசரி மின்சாரக் கட்டணம் 5 இலட்சம் ரூபாவாக இருந்த போதிலும் புதிய கட்டணத் திருத்தத்தின் கீழ் இந்தக் கட்டணம் 10 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் சுட்டிக்காட்டுகிறார்.
மின்வெட்டுக் காலத்தில் மின்சார உற்பத்திக்காக அதிகளவில் டீசல் பயன்படுத்தப்படுவதால் தேயிலை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கி வட்டி அதிகரிப்பால் தொழில்துறையும் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.