போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம் சம்பவம்!
கிளிநொச்சியில் கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (01-03-2023) பகல் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.