போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட மகிழ்ச்சி செய்தி
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொசவின் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
தற்போது கட்டுப்பாட்டு விலையில் உள்ள பொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை பேணுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
ஏற்கனவே உணவு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள விலையை விட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிந்தால் அந்தச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் கொடிகார தெரிவித்துள்ளார்.