போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மாணவர்கள் சென்ற வாகனம் விபத்து
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி – எல பிரதேசத்தில் உள்ள தோவ ரஜமஹா ஆலய ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடனக் குழுவின் மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதில் நடன ஆசிரியர் உட்பட பலர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை பிரதேசத்தில் உள்ள கலை நிறுவனம் ஒன்றின் நடன ஆசிரியை மற்றும் மாணவர்கள் குழுவொன்றே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 8 மாணவிகளும் 2 மாணவர்களும் அடங்குவதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.