போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!
நமுனுகுல – கனவரல்ல ஈ ஜி கே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி நேற்று (09-10-2022) உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனவரல்ல ஈ ஜி கே தோட்ட தொழிலாளிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,
உயிரிழந்த தொழிலாளியின் 60 வயது நிரம்பும் வரை குடும்பத்தினருக்கு வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.