போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் இன்று பகல் அரங்கேறிய பகீர் சம்பவம்
யாழ்.அரியாலை – தபால்கட்டை சந்தியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞன் வீதியில் நின்றிருந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடைக்குள் வாள் ஒன்றை மறைத்து எடுத்துவந்து, தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை யாழில் போதைப்பொருள் பயன்பாட்டினை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ்வாறான வன்முறை சம்பவம் அரங்கேறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.