போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! அதிர்ச்சி சம்பவம்
யாழில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை அருந்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யாழ். புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, 54 வயதான மார்க்கண்டு திருக்குமரன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி மதுபான வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதனால் மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை அருந்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.