போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
50 ஆயிரம் ரூபாய்க்காக தந்தை செய்த பாதக செயல்!
பிறந்து ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு விற்றதாக கூறப்படும் தந்தையை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண் மற்றும் இடைத்தரகர் கைது
இந்நிலையில் குழந்தையை கொள்வனவு செய்த பெண் மற்றும் இடைத்தரகராக செயற்பட்ட நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடுக்கல் வாங்கலில் இடைத்தரகராக செயற்பட்ட கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் அநுராதபுரம் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மீட்கப்பட்ட குழந்தையை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.