போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பு பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப் பிரயோகம்
கொழும்பு – 15 முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப் பிரயோகமொன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை அணைய நாட்களாக தென்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தெரிய வந்த தகவல்கள்
இந்த நிலையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த துப்பாக்கிச்சூடு பிரியோகம் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சந்தேகநபர்கள் வாகனத்தை ஹிங்குருகொட சந்தியில் புதிய பாலத்தின் கீழ் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்தை கிராண்பாஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் வாகனத்திலிருந்து டி56 துப்பாக்கியும், 9எம்எம் துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டியில் பயணித்தவர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.