போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது
யாழில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அது மட்டும் அன்றி அவர் தங்கியிருந்த இடத்திலிருந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ரோந்து பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று மதுபோதையில் இருந்த 41 வயதானவரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைதானவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.